பொங்க வையுங்க எங்க வாழ்வாதாரத்தை
பொங்கல் பரிசோடு சேர்த்து மண் பானை, மண் அடுப்பும் இலவசமாக வழக்கோரி சென்னையில் மண்பாண்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர், பொங்கல் பொங்க வைக்க மண்பானையும் மண் அடுப்பும் வழங்க வலியுறுத்தி அண்மையில் மண் பாண்டத்தொழிலாளர்கள் முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளித்தனர், இதைத்தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மண்பானை மண் அடுப்புடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலரும் மண்பாண்ட தொழிலாளர் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சேம.நாராயணன் தலைமை தாங்கினார், நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பொங்கலுக்கு மண் பானையும் அடுப்பும் இலவசமாக கொடு என்று முழக்கமிட்டனர், கொரோனா நோய்ப்பரவலில் காணாமல் போயிருக்கும் தங்களது வாழ்வாதாரம் செழிக்க மண் பானையும் மண் அடுப்பையும் வழங்கி தங்களது வாழ்க்கையையும் பொங்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்,,