ரத்த தான சாதனையாளருக்கு ராயல் சல்யூட்
202 முறை ரத்த தான சாதனை நிகழ்த்திய ராயபுரம் ராஜசேகரனுக்கு கவிஞர் ராமலிங்க ஜோதி தலைமையில் இளைஞர்கள் பெண்கள் ராயல் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர் 202 முறைகளுக்கும் மேலாக ரத்த தானம் செய்து புகழ்ப்பெற்றவர், பி.ஏ.கே.பி.ராஜ்சேகரன், சென்னை கிரேஸ்கார்டனில் வாழ்ந்து பல்வேறு சமூக நல அமைப்புகளுக்கும் சமூக சேவை புரிபவர்களுக்கும் உதவி வந்த அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 1 ம்தேதி காலமானார், அவரதுமறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது, அவரது முதலாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று ராயபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது தமிழக காங்கிரஸ் பொது செயலாளர் கவிஞர் க.ராமலிங்க ஜோதி தலைமையில் , ராஜ்சேகரனின் உருவப்படம் வாகனம் மூலம் , சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் 3 வது சந்தில் இருந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது, கிரேஸ் கார்டன் முதல் பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தை வழக்கறிஞர் கேசிஎஸ்கே பாலாஜி தொடங்கி வைத்தார். முன்னாள் கவுன்சிலர் எம்.கே.பாபு சுந்தரம் முடித்து வைத்தார்.இந்த ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ராஜ்சேகரனுக்கு புகழ் அஞ