மாஸ்ட்ரோ இளையராஜாவுக்கு அஸ்திவாரம்
ஐ.மா.பா என்ற இலக்கிய உலகிலும் இடதுசாரிகள் வட்டாரத்திலும் கொண்டாடப்டும் மாயாண்டி பாரதி தான் இன்றைய இளையராஜாவுக்கு இசை அஸ்திவாரம் போட்டவர் என்றால் பலருக்கும் வியப்பாக இருக்கும். ஆம் இடதுசாரிகள் மத்தியில் ஒரு காலக்கட்டத்தில் ரொம்ப பிரபலமானவர் பாவலர் வரதராஜன்.இளையராஜாவின் அண்ணனான இவருடைய பாடல்களும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளும். கம்யூனிஸ்ட் இயக்கத்தினரிடையே பிரபலமாவை.தம்பிகளை சேர்த்து இசைக்குழுவை நடத்தினார் பாவலர். அந்த பாவலரை இசைக்குழுவை தொடங்க வித்திட்டவர் மாயாண்டி பாரதி. அது தான் இன்றைய மாஸ்ட்ரோவுக்கும் வழிகாட்டியாய் அமைந்திருக்கிறது இப்போது மாயாண்டி பாரதி பற்றி ஒரு ஃப்ளாஷ்பேக் மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி மாயாண்டி பாரதி தனது வாழ்நாளை 13 ஆண்டுகள் வரை சிறையில் கழித்தவர். ’ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்’ என்ற வார்த்தை ஐ.மாபாவிற்கு பழக்கப்பட்ட வார்த்தை. “ நாங்கள் பள்ளிக்கூடம் போகும்பொழுது தெருவில் வந்தே மாதரம்,பாரத மாதாவுக்கு ஜே! என்று சத்தமாக சொல்லிக்கொண்டு மதுரை வீதிகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக செல்வார்கள். அதை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு பைகளை தூக்கி எறிந்து விட்டு