இன்கம்டாக்ஸ் கணக்கு எங்கே

சட்டபேரவை தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.* தமிழக சட்டசபை தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல், கடந்த 12ம்தேதி துவங்கியது. இத்தேர்தலில் அதிமுகவில் மட்டும் கிட்டதட்ட 8 ஆயிரத்து 241 பேர் விருப்பமனுத்தாக்கல் செய்துள்ளனர், திமுகவில் தொகுதி வாரியாக குறைந்தபட்சம் 25 பேரில் இருந்து 50 பேர் தான் விருப்பமனுக்களை வழங்கியுள்ளனர், அதிமுக திமுக அமமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் அறிிவிக்கப்பட்டுள்ளது, வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஒபிஎஸ் போடி நாய்க்கனுாரி்ல் மனுத்தாக்கல் செய்துள்ளார், இந்நிலையில் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது வழக்கமாக வேட்பாளர்களின் சொத்துக்கள் குடும்பத்தினரின் சொத்துக்கள் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் கேட்கும். இப்போது வருமான வரி கணக்கையையும் கேட்டு தேர்தல் ஆணையம் அலற வைத்திருக்கிறது. , இது குறி்த்து தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கையில் க வேட்பாளரின் மொபைல் போன் எண், இ-மெயில் முகவரி, சமூக வலைதள கணக்கு விவரம், வருமான வரி கணக்கு எண் மற்றும் கடந்த, 5 ஆண்டுகளில் காட்டப்பட்ட கணக்குப்படி, மொத்த வருமானம் போன்ற தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அதேபோல, அசையும்/ அசையா சொத்துகள் பட்டியலில், வழக்கமாக, கார், பைக், தங்க நகைகள், நிலம், வீடு இருக்கிறதா; அதில், விமானம், படகுகள், கப்பல்கள் இருந்தால், தயாரிப்பு தேதி மற்றும் வாங்கப்பட்ட ஆண்டு மற்றும் தொகையுடன் குறிப்பிட வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமென, கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மற்றும் தேர்தல் செலவின கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என, தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் என, 30 பக்க பட்டியலை, இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது: வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்வது, வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது, செலவின கணக்குகளை தணிக்கை செய்வதற்கு, குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்/ மாற்றுத்திறனாளிகள்/ கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படுகிறது. அவர்கள் வீட்டுக்குச் சென்று, 12டி படிவம் வழங்கப்படுகிறது. இசைவு கடிதம் தந்தால், அவர்களுக்கு தபால் ஓட்டு கொடுத்து, பெறப்படும். தபால் ஓட்டு பதிவு செய்தவர்கள், ஓட்டுச்சாவடிக்கு வரக்கூடாது என்பதற்காக, வாக்காளர் பட்டியலில் ரவுண்ட் செய்து, தனி அடையாளமிடப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சசிகலா எந்த டீம்